Nagaratharonline.com
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறது  Sep 7, 12
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வைக் காரணம் காட்டியும், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறியும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தக் கோரி வருகின்றன.

நாளொன்றுக்கு தங்களுக்கு ரூ. 550 கோடி இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

இதனால் வழக்கம் போல் உடனடியாக பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 5 வரை விலை உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அமலுக்கு வரும் அல்லது அடுத்த இரு நாட்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.