Nagaratharonline.com
 
காரைக்குடியில் பரவுகிறது டெங்கு : மேலும் ஆறு பேருக்கு பாதிப்பு  Sep 3, 12
 
காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நவரத்தினா நகர் பகுதியில்,மேலும் பலருக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு டெங்கு பரவியிருக்குமா? என்பதை கண்டறிய ஆறு பேரின், ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நவரத்தினா நகரை சேர்ந்த கற்பகவள்ளி, டெங்கு காய்ச்சலால், இறந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சநேற்று சசாக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் பூங்கோதை, டாக்டர் நாச்சியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் அழகப்பன், முருகேசன் அடங்கிய குழுவினர், கொசுபுழு ஒழிப்பு பணி, காய்ச்சல் பாதித்தவர்கள் கணக்கெடுக்கும் பணி, புகை அடிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.