Nagaratharonline.com
 
கீழச்​சி​வல்​பட்டி மெட்​ரிக்.​ பள்​ளி​யில் ​ புதிய நூல​கக் கட்​ட​டம் திறப்பு விழா  Dec 17, 09
 
சிவங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே,​​ கீழச்​சி​வல்​பட்டி மெட்​ரிக் பள்​ளி​யில் புதிய நூல​கக் கட்​ட​டத் திறப்​பு​விழா நடை​பெற்​றது.​ ​

​ ​ ​ திருப்​பத்​தூர் அருகே கீழச்​சி​வல்​பட்​டி​யில் உள்ள ஆர்.எம்.மெய்​யப்​பச் சட்​டி​யார் மெட்​ரிக் பள்​ளி​யில் புதிய நூல​கக் கட்​ட​டம் மற்​றும் தண்​ணீர் தொட்டி திறப்பு விழா நடை​பெற்​றது.​

​ திரு​ம​யம் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் ராம.சுப்​பு​ராம் தலைமை வகித்​தார்.​ மாவட்ட சேர்​மன் பாண்​டி​யன் முன்​னிலை வகித்​தார்.​ கே.ஆர்,​வைர​வன் நா.சுப்​பி​ர​ம​ணி​யன் ஆகி​யோர் வர​வேற்​பு​ரை​யாற்​றி​னர்.​

​ விழா​வின் சிறப்பு விருந்​தி​ன​ராக சிவ​கங்கை மாவட்ட காவல் துறை கண்​கா​ணிப்​பா​ளர் ராஜ​சே​க​ரன் கலந்து கொண்டு நூல​கக் கட்​ட​டத்தை திறந்து வைத்து நூல​கத்​தின் பயன்​பா​டு​கள் குறித்​துப் பேசி​யது:​

​ ​ ​ நூல​கம் என்​பது ஓரு உல​கத்​துக்​குச் சம​மா​னது.​ பள்ளி மாணவ,​​ மாண​வி​கள் தின​மும் நூல​கத்​துக்கு வந்து படிக்​கும் பழக்​கத்தை ஏற்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்.​

​ எவ்​வ​ளவு விஷ​யங்​களை நாம் கண்​ணால் கண்​டா​லும்,​​ படித்து நம் மன​தில் பதிந்த விஷ​யம் மட்​டுமே வாழ்​நாள் முழு​தும் நம் நினை​வில் நிற்​கும்.​ பேர​றி​ஞர் அண்ணா இறக்​கும் தரு​வா​யில் கையில் புத்​த​கம் வைத்​தி​ருந்​தார் என்​றார்.​ ​

​அபி​மன்யு,​​ ஊராட்​சி​மன்​றத் தலை​வர் வெள்​ளை​யன் செட்​டி​யார்,​​ நல்​லம்​மாள் ஆகி​யோர் கலந்து கொண்​ட​னர்.​ பள்​ளித் தாளா​ளர் எஸ்,​எம்.பழ​னி​யப்​பன்,​​ முதல்​வர் ஜி.குணா​ளன் ஆகி​யோர் நன்றி கூறி​னர்

source : Dinamani 18/12/09