Nagaratharonline.com
 
மூதாட்டியிடம் செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்  Dec 17, 09
 
அதிகாலையில் வாசலில் தண்ணீர் தெளிக்க வந்த மூதாட்டியிடம் ஐந்தரை பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : திருமயம் அருகே உள்ள ராமசந்திரபுரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் தெய்வராமன் (80). தொழிலதிபர். இவரது மனைவி வள்ளியம்மை (77). கடந்த 16ம் தேதி அதிகாலை மார்கழி மாதப்பிறப்பன்று திருப்பள்ளி எழுச்சி. கோயிலுக்கு செல்ல விரும்பினார். அதனால் வாசலில் சாண தண்ணீர் தெளித்து கோலமிட வந்தார்.




அப்போது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஏதோ அட்ரஸ் கேட்பது போல் வள்ளியம்மை அருகில் வந்து செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். செயின் மதிப்பு ரூ 35 ஆயிரம் ஆகும். இது பற்றி வள்ளியம்மை போலீசில் புகார் செய்தார். திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம ஆசாமிகள் முதியோரிடம், பெண்களிடம் பணம், நகைகளை பறித்துச்செல்லும் சம்பவங்கள் திருமயம் தாலுகாவில் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.

souirce : Dinamalar 18/12/09