Nagaratharonline.com
 
கார்களில் கருப்பு"ஸ்டிக்கர்': கடும் நடவடிக்கை  Jul 27, 12
 
கார்களின் உள்ளே இருக்கும் நபர் தெரியாமல் இருக்க,கண்ணாடிகளில் கருப்பு "ஸ்டிக்கர்' ஒட்டியுள்ள உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் கார்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் கண்ணாடிகளில் கருப்பு பிலிம் "ஸ்டிக்கர்' களை ஒட்டி இருப்பதாக எஸ்.பி.,க்கு புகார் வந்தது.

இதுபோன்ற வாகனங்களை சிலர் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும்,போலீசார் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இந் நிலையில்,கார் கண்ணாடிகளில் கருப்பு "ஸ்டிக்கர்' ஒட்டியுள்ள உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்.பி., பன்னீர்செல்வம் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.