Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் ஆடித் தேரோட்டம்  Jul 25, 12
 
திருப்பத்தூர், ஜூலை 23: திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ செüமிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கோஷ்டியூர் செüமிய நாராயணப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த ஜூலை 14-ம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. பள்ளியறையில் செüமிய பெருமாள் மற்றும் ஆண்டாள் எழுந்தருளினர்.

இரவில் பல்லக்கில் பெருமாளும், ஆண்டாளும் திருவீதி உலா வந்தனர்.

திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் பெருமாளும், ஆண்டாளும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4.10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் பள்ளியறைக்கு பெருமாளும், ஆண்டாளும் எழுந்தருளினர்.

தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு உற்சவம் நிறைவடைந்தது.

Source:Dinamani