Nagaratharonline.com
 
திறக்கப்படாத மதகுபட்டி புதிய பஸ் ஸ்டாண்ட்  Jul 9, 12
 
மதகுபட்டியை சுற்றியுள் அலவாக்கோட்டை,அழகமாநகரி,சொக்கநாதபுரம்,பாகனேரி உள்ளிட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு மதகுபட்டிக்கு வர வேண்டும். இங்கு பயணிகள் உட்கார கூட இடம் இல்லாமல் மழை,வெயிலில் மக்கள் தவித்தனர்.

கடந்த 2010-2011ம் ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் திறக்கப்படாமலேயே உள்ளது.விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பஸ் ஸ்டாண்டை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.