Nagaratharonline.com
 
திருச்சி - திருநெல்வேலி அதிவேக விரைவு ரயில்  Jul 5, 12
 
திருச்சி - திருநெல்வேலி விரைவு ரயில் சேவை ஓரிரு வாரங்களில் தொடங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில், தினந்தோறும் திருச்சியிலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி, மணியாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக திருநெல்வேலியை பகல் ஒரு மணிக்குச் சென்றடையும்.

எதிர்மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

இந்த ரயிலில் குளிர்சாதன அமரும் வசதியுள்ள ஒரு பெட்டி, இரண்டாம் வகுப்பு அமரும் வசதியுள்ள 6 பெட்டிகள், இரண்டாம் வகுப்பில் 6 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு (பொது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, சரக்கு ஏற்றும் பகுதி சேர்ந்து) 2 பெட்டிகள் என மொத்தம் 15 பெட்டிகள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.