Nagaratharonline.com
 
யோகா பட்​டயப் பயிற்சி பெற்றோருக்கு சான்​றி​தழ் அளிக்கும் விழா  Dec 16, 09
 
பொன்​ன​ம​ரா​வ​தி​யில் உள்ள மன​வ​ளக் கலை மன்​றத் தவ மையத்​தில்,​ ​ "மனித மாண்​பும் யோக​மும்' பயிற்சி பெற்ற மாண​வர்​க​ளுக்கு பல்​க​லைக்​க​ழக பட்​ட​யச் சான்று வழங்​கும் விழா ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.

​ விழா​வுக்கு,​ பாரதிதாசன் பல்கலைக்கழக யோகா பிரிவு ஒருங்கிணைப்பாளர் தி. பூங்​குன்​றன் தலைமை வகித்​தார். பொன்​ன​ம​ரா​வதி ஸ்ரீ துர்கா மருத்​து​வ​மனை அறு​வைச் சிகிச்சை நிபு​ணர் ​ ஆ. அழ​கே​சன் சிறப்பு விருந்​தி​ன​ரா​கப் பங்​கேற்​றார். பயிற்சி பெற்ற 29 பேருக்கு பல்​க​லைக்​க​ழ​கச் சான்​றி​தழ்​களை அவர் வழங்​கி​னார். மன்ற பொறுப்​பா​ளர்​கள் ரோஸ்​லெட்,​ சி. தமி​ழ​ரசி,​ரா. லதா,​ஆர். புவ​னேஸ்​வரி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.

​ முன்​ன​தாக,​ மன​வ​ளக் கலை மன்​றத் துணைப் பொறுப்​பா​சி​ரி​யர் எம். சொக்க​லிங்​கம் வர​வேற்​றார். நிறை​வில்,​ மன்ற உறுப்​பி​னர் எம். கண்​ணன் நன்றி கூறி​னார்.​

source : Dinamani 15/12/09