Nagaratharonline.com
 
தேவ​கோட்டை:நீர் வளங்​களை பேணிக் காக்க தவ​றி​விட்​டோம்: பொன்​னம்​பல அடி​க​ளார்  Dec 16, 09
 
தேவ​கோட்டை,​​ டிச.​ 15:​ நீர் வளங்​களை பேணிக் காக்க நாம் தவ​றி​விட்​டோம் என குன்​றக்​குடி பொன்​னம்​பல அடி​க​ளார் கூறி​னார்.​

​ சிவ​கங்கை மாவட்​டம் தேவ​கோட்டை நால்​வர் கோவி​லில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில்,​​ பொற்​கி​ழிக் கவி​ஞர் அரு.சோம​சுந்​த​ர​னுக்கு பென்​கு​யின் பதிப்​ப​கம் அளித்த வாழ்​நாள் சாத​னை​யா​ளர் விருதை வழங்கி அவர் பேசி​யது:​

​ சிவ​கங்கை மாவட்​டத்​தின் பல வர​லா​று​கள் நமக்​குத் தெரி​யா​மல் போய்​விட்​டன.​ ​ இந்த மண்​ணில் பல ஆறு​கள் புதை​யுண்டு விட்​டன.​ நீர் வளத்தை நாம் முறை​யாக பரா​ம​ரிக்​கத் தவ​றி​யதே இதற்​குக் கார​ணம்.​

​ மது​ரை​யில் பெய்​யும் மழை நீர்,​​ பல கண்​மாய்​களை நிரப்பி சிவ​கங்கை மாவட்​டம் வழி​யாக ராம​நா​த​பு​ரம் கண்​மாய்க்​குச் செல்​லும் வகை​யில் நீர்​வ​ழிப் பாதை நம் முன்​னோர்​க​ளால் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ முன்பு நக​ரத்​தார்​க​ளால் பல குளங்​கள் உரு​வாக்​கப்​பட்டு பரா​ம​ரிக்​கப்​பட்​டன.​ ஆனால் இன்று அது மாதிரி செய்ய வாய்ப்​பில்லை.​ பணம் இருந்​தா​லும் வேலை செய்ய ஆள் இல்லை.​ தேசிய வேலை உறு​தி​ய​ளிப்பு திட்​டத்​தில் தூர்​வார மட்​டும்​தான் முடி​யும்.​

​ இன்று நமது மக்​க​ளின் அறிவை மழுங்​க​டிக்​கச் செய்​யும் நிகழ்ச்​சி​கள்,​​ தொலைக்​காட்​சி​யில் மாலை நேரங்​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கின்​றன.​ ஆனால்,​​ இது​மா​திரி இலக்​கி​யத் தமிழை வளர்க்​கும் நிகழ்ச்​சி​கள் நடப்​பது அரி​தா​கி​விட்​டது.​

​ ஆய்​வுக்​கூ​டங்​க​ளில் கண்​டு​பி​டிக்​கப்​பட்​டவை அப்​ப​டியே இருந்​து​விட்​டால் அது தத்​து​வம்.​ அவை மக்​க​ளுக்கு பயன்​ப​டக்​கூ​டிய வகை​யில் மாற்​றப்​பட வேண்​டும்.​

​ மகாத்மா காந்​தியை உரு​வாக்​கிய மண் நம்​மு​டை​யது.​ தீண்​டா​மையை ஒழிக்க தேவ​கோட்​டைக்கு வந்த காந்தி,​​ மதுரை செல்​லும் வழி​யில் திருப்​பத்​தூர் அருகே உட​லில் துணி​யின்றி கல் உடைத்த தொழி​லா​ளி​யைப் பாரத்து,​​ தான் அணிந்​தி​ருந்த ​ கோட்டை கழற்றி எறிந்​து​விட்டு வெறும் கோவ​ணத்​து​டன் அன்று முதல் சென்​றார்.​ ​ தென் ஆப்​பி​ரிக்​கா​வில் நடை​பெற்று வரும் அவ​லங்​களை வெளி உல​கிற்கு வெளிச்​சம் போட்டு காட்​டி​விட்​டார் என்று கூறி,​​ டர்​பன் நக​ருக்​குள் செல்ல அவரை அனு​ம​திக்​க​வில்லை.​ இர​வில் மட்​டும் செல்​ல​லாம் எனக் கூறி​னர்.​ இர​வில் செல்​வ​தற்கு நான் திரு​டன் அல்ல எனக் கூறி,​​ பக​லில் சென்று சொல்​ல​டி​யும் கல்​ல​டி​யும் பட்​டார்.​ மேலும் ஆசிய நாட்​ட​வர் அனை​வ​ரும் தங்​க​ளது பத்து விரல்​க​ளை​யும் பதி​வு​செய்து அட்டை வைத்​துக்​கொள்ள வேண்​டும் என தென் ஆப்​பி​ரிக்க அரசு இட்ட உத்​த​ரவை,​​ பல நூறு பேரை திரட்டி தீயிட்​டுக் கொளுத்​தி​னார்.​ அது​தான் இந்​தி​யா​வில் சுதந்​தி​ரப் போராட்​டம் நடை​பெ​று​வ​தற்கு முன்​னோட்​ட​மாக இருந்​தது.​

​ புத்​த​கம் படிக்​கவே நேரம் கிடைக்​காத காலத்​தில்,​​ 102-வது புத்​த​கத்தை எழுதி தனது பதிப்​ப​கம் மூலம் வெளி​யிட்ட அரு.சோம​சுந்​த​ரன் போன்​ற​வர்​கள் தமிழை வாழ வைப்​ப​வர்​கள் என்​றார் அடி​க​ளார்.​

​ முன்​ன​தாக பென்​கு​யின் பதிப்​ப​கம் அனுப்​பிய பரி​சான தங்​கப் பதக்​கத்​தை​யும் வெள்​ளிக் கேட​யத்​தை​யும் சோம​சுந்​த​ர​னுக்கு அடி​க​ளார் வழங்​கி​னார்.​ அவர் எழு​திய அருசோ கவி​தை​கள் நூலை வெளி​யிட்​டார்.​ முதல் பிர​தியை ஈரோடு நக​ரத்​தார் சங்​கத் தலை​வர் சிவ​சுப்​பி​ர​ம​ணி​யன் செட்​டி​யார் பெற்​றுக்​கொண்​டார்.​

​ ஜமீன்​தார் நாரா​ய​ணன் செட்​டி​யார் தலைமை வகித்​தார்,​​ காந்​தி​கி​ராம பல்​க​லைக்​க​ழக துணை​வேந்​தர் ராம​சாமி கெüர​விக்​கப்​பட்​டார்.​ கும​ரப்​பன்,​​ வள்​ளி​யப்​பன்,​​ சபா​அ​ரு​ணாச்​ச​லம்,​சேது​ரா​மன்,​​ செட்​டி​யப்​பன்,​​ ஆண்​டி​யப்​பன்,​​ காசி​நா​தன்,​​ பேரா​சி​ரி​யர் அய்க்​கண் ஆகி​யோர் பாராட்​டி​னர்.​ அப்​பச்சி சபா​பதி அறி​முக உரை​யாற்​றி​னார்.​ அருசோ அரு​ணாச்​ச​லம் நன்றி கூறி​னார்.​


Source: Dinamani - 16 Dec 2009