Nagaratharonline.com
 
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா: சிலைக்கு அரசு சார்பில் மாலையணிவிப்பு  Jun 25, 12
 
காரைக்குடி, ஜூன் 24: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி, காரைக்குடியில் கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில்,மாவட்ட வருவாய் அலுவலர் சோ. தனபால் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, மாநில பிற்பட்டோர் நல ஆணைய உறுப்பினர் கேஆர்.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். கண்ணதாசன், காரைக்குடி வட்டாச்சியர் டி. செல்வராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுரேஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய கண்ணதாசன் நற்பணிமன்ற பொதுச் செயலாளர் கவிஞர் அரு. நாகப் பன், அரிமா பிரமுகர் எஸ். கண்ணப்பன், காரைக்குடி தொழில் வணிகக் கழக இணைச் செயலாளர் என்.பி. ராமசாமி, காரைக்குடி கட்டிடப் பொறியாளர் சங்கத்தலைவர் ரவி, அண்ணா தொழிற் சங்க விவசாயப்பிரிவு மாநிலச்செயலாளர் எஸ். கிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் சேதுபதி உள்ளிட்ட பலர் கண்ணதாசன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Source:Dinamani