Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி : இலவச கண் சிகிச்சை முகாம்  Jun 23, 12
 
கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் காரைக்குடி சிட்டி அரிமா சங்கம், கோல்டன் சிங்கார் மகால், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடை பெற்றது.

முகாம் துவக்கவிழாவில் சிட்டி அரிமா சங்கத்தின் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணிகண்டன் முகாமை தொடக்கி வைத்தார். சிங்காரம் செட்டி யார், ஐசக், முத்தையா ராமு, அருணாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் 210 பேர் கண்பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 45 பேர் கண் அறுவைச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 30 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.