Nagaratharonline.com
 
ரூ.40ஐ நெருங்குகிறது "டீலக்ஸ்' அரிசி  Jun 20, 12
 
அரிசி விலை கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. உயர்ரகமான டீலக்ஸ் பொன்னி 40 ரூபாயை தொடும் நிலையை நெருங்கி கொண்டிருக்கிறது.
அறுவடை முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நெல் வரத்துஇல்லாததால், அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காரைக்குடி,புதுவயலில் 150க்கும் மேற்பட்ட மாடர்ன் அரிசி மில்கள் உள்ளன. ஆந்திரா,கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு நெல் வரத்து உள்ளது. இங்கு அரைக்கப்படும் அரிசி வெளி மாநிலங்களுக்கும்,மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்
படுகிறது. தற்போது அறுவடை இல்லாததால், நெல்லின் விலை உயர்ந்துவருகிறது