Nagaratharonline.com
 
தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா  Jun 9, 12
 
தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.


இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 240 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 205 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை பாராட்டும் விழா பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளிச் செயலாளர் ராமநாதன்செட்டியார் தலைமை வகித்தார். இதில் செட்டிநாடு மருத்துவமனை மரபியல் அறிஞர் பிச்சப்பன், கன்னிமாரா நூலக முன்னாள் இயக்குநர் ஆவுடையப்பன், வள்ளல் மேனா குடும்ப சோலீஸ் மற்றும் சேவுகன்செட்டியார், அறிவியல் அறிஞர் அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டினர்.