Nagaratharonline.com
 
மதகுபட்டியில் சுகாதாரக்கேடு  Dec 14, 09
 
மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சிவகங்கை மெயின்ரோட்டில் குப்பைகள் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள கடைகளில் சேகரமாகும் கோழி கழிவு, ஓட்டல் உணவுக் கழிவுகளை ரோட்டோரம் கொட்டுகின்றனர். இவற்றை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதில்லை. பழைய குப்பைகள் தேங்கிய இடத்திலேயே தொடர்ந்து கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதிலிருந்து உருவாகும் கொசுக்களின் மூலம் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் கொட்டுவதால் பயணிகள் அவதிக் குள்ளாகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க அனைத்தும் ஒரே இடத் தில் செயல்பட செய்யவேண்டும்.

dinamalar 15/12/09