Nagaratharonline.com
 
அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளை விழா - எஸ்பி முத்துராமன், சுஹாசினி பங்கேற்பு  May 19, 12
 
அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், தமிழகத்தின் நலனுக்காகநடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது மாநாடு ஹூஸ்டன் நகரில் வரும் மே 25-ம் தேதி தொடங்குகிறது.

இந்த அறக்கட்டளையின் சார்பில் வருடந்தோறும் மாநாடுகள் நடத்தி கிடைக்கப்பெறும் நிதி ஆதாரத்தைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

'நந்தா’, ‘மௌனம் பேசியதே’ திரைப்பட தயாரிப்பாளருமான ராஜன் ராதாகிருஷ்ணன் கலை நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ளார். எஸ்.பி முத்துராமன், சுகாசினி, ஞானசம்மந்தம், பர்வீன் சுல்தானா, உமையாள் முத்து, நெல்லை கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ஹரிசரண், ராகுல் நம்பியார், சைந்தவி பங்கேற்கும் இசை நிகழ்சிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கூடுதலாக புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமியின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.