Nagaratharonline.com
 
'சன் கன்ட்ரோல் பிலிம்': போலீஸ் எச்சரிக்கை  May 19, 12
 
வாகனங்களில், "சன் கன்ட்ரோல் பிலிம்' ஒட்டுவது தொடர்பான, சுப்ரீம் கோர்ட் தடையைத் தொடர்ந்து, அதற்கான விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

வாகனங்களின் கண்ணாடிகள் மீது, எந்த நிறத்திலும் பிலிம்கள் ஒட்டு வதற்கு அனுமதியில்லை. முன்பக்கம் மற்றும் பின்பக்கக் கண்ணாடிகளில் 70 சதவீதம், பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் ஒளி ஊடுருவும் அளவு கொண்ட கண்ணாடிகள் பொருத்தலாம்.விதிகளை மீறும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து அபராத கட்டணம் வசூலிப்பதுடன், கறுப்பு நிற பிலிம்களையும் அகற்றலாம்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை, சென்னை போக்குவரத்து போலீசார், கடுமையாக அமல்படுத்த உள்ளனர். விதியின்படி இல்லாத வாகனங்களின் பிலிம்களை அகற்றுவதுடன், முதல் முறை மீறுவோருக்கு 100 ரூபாயும், இரண்டாவது முறை மீறுவோருக்கு 300 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என, அவர்கள் எச்சரித்துள்ளனர்.

source : Dinamalar