Nagaratharonline.com
 
கல்லலில் சூதாட்ட கிளப் நடத்திய எஸ்.ஐ., உட்பட 10 பேர் கைது  May 1, 12
 
கல்லலில் சூதாட்ட கிளப் நடத்திய மற்றும் சூதாடிய ஓய்வு எஸ்.ஐ., உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லலை சேர்ந்தவர் எஸ்.ஐ., (ஓய்வு) திருநாவுக்கரசு,60. இவரும், சேவுகன், 42. என்பவரும் சேர்ந்து, புரண்டிபுதுக்குடி காட்டிற்குள் லைசென்ஸ் இன்றி சூதாட்ட கிளப் நடத்தி வந்துள்ளனர்.
தேவகோட்டை கூடுதல் எஸ்.பி., சமன்ந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையில் "மப்டி'யில் வந்த போலீசார், சூதாட்ட கிளப்பில் "ரைடு' நடத்தினர். அப்போது, கிளப் நடத்திய ஓய்வு எஸ்.ஐ., திருநாவுக்கரசு மற்றும் 10 பேரை, இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார். அவர்களிடமிருந்த 36,700 ரூபாயை பறிமுதல் செய்தார்.

source : Dinamalar