Nagaratharonline.com
 
செட்டிநாடு பகுதிகள் : மின்தடை நேரம் மாற்றம்  May 1, 12
 
சிவகங்கை: சிவகங்கை மின் பகிர்மான வட்ட பகுதிகளுக்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் மாதந்திர சுழற்சி முறையில் ஏற்படுத்தப்படும் மின்தடை நேரம் இன்று முதல் (மே1) 2 மணிநேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
* மதகுபட்டி தொழிற்சாலை பகுதிகள், காளையார்கோவில் நகர், புளியடிதம்பம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகம், சிவகங்கை நகர், மானாமதுரை சிப்காட் மற்றும் நகர் பகுதிகள், மடப்புரம், பூவந்தி, கண்ணங்குடிபகுதிகளில் காலை 6 முதல் 8 மணி வரையிலும்,
*கானாடுகாத்தான் மில் மற்றும் செட்டிநாடு பகுதிகள், மாதவராயன்பட்டி, அரசனூர் டாமின், இளையான்குடிநகர், நாட்டரசன்கோட்டை, திருப்பத்தூர் நகர், காரைக்குடி அண்ணாநகர் பகுதிகளில் 8 மணிமுதல் 10 வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
*ராஜகம்பீரம், கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், காரைக்குடி தொழிற்பேட்டை, திருப்புவனம்நகர், தேவகோட்டை நகர், வேலாயுதபட்டிணம், கொந்தகை,பொட்டப்பாளையம், சிங்கம்புணரி தொழிற்சாலை பகுதிகளில் காலை 10 முதல் 12 மணி வரையும்,கல்லுப்பட்டி, காரைக்குடி மில் பகுதிகள்,அரியக்குடி செஞ்சை, காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட், சிங்கம்புணரி நகர், மித்ராவயல்,மணலூர் பகுதிகளில் 12 முதல் 2 மணி வரையிலும்,
புதுவயல், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, மகிபாலன்பட்டி, வேப்பங்குளம், ஆலங்குடி, பட்டிணம்பட்டி, கண்டரமாணிக்கம், நெல்முடிகரை அகரம், தே. புதுக்கோட்டை, மாங்குளம், கீழப்பிடாவூர், கண்டவராயன்பட்டி, குன்றக்குடி, காரைக்குடி முத்துப்பட்டினம், கல்லல், செம்பனூர், அ.சிறுவயல் பகுதிகளில் 2முதல் மாலை 4 மணி வரையும்
காரைக்குடி எச்.டி.சி., பகுதிகள், கொத்தமங்களம், மங்களம், பள்ளத்தூர்,கோட்டையூர்,பெரியகோட்டை, நாகாவயல் பகுதி, தாயமங்கலம், கண்ணமங்களம்,தென்கரை, பிள்ளையார்பட்டியில் 4 முதல் 6மணி வரையிலும் மாற்றிமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் நல்லம்மாள் தெரிவித்தார்.

Source:Dinamalar