Nagaratharonline.com
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா  Apr 29, 12
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை அழகியநாச்சியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.பிற்பகல் கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்றது.இரவு பட்டமரத்தானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து பொன்னமராவதி, இந்திராநகர்,நாட்டுக்கல்,வலையபட்டி சாவாங்குண்டு,அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலிருந்தும் மற்றும் பட்டமரத்தான் விழாக்குழுவினர் ஆகியோர் பால்குடம் மற்றும் பூத்தட்டு ஏந்தி வந்து பட்டமரத்தானுக்கு செலுத்தி வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, ஆன்மீகச் சொற்பொழிவு, ஆடல்-பாடல் நிகழ்ச்சி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

source : Dinamani