Nagaratharonline.com
 
அரிய புத்தகங்களை பராமரிக்க கோரிக்கை  Dec 11, 09
 
பாகனேரி நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களை பாராமரிக்க வலியுறுத்தப்பட்டது.அந்த கிராமத்தை சேர்ந்த காசிவிஸ்வநாதன் செட்டியார் 20 ஆயிரத்திற்ம் மேற்பட்ட அரிய புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கினார். தற்போது நூலகம் இடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட் டது.இப்புத்தகங்களை சென் னை மத்திய நூலகத்திற்கு அனுப்ப ஏற்பாடு நடப்பதாக மாவட்ட நூலகர் தெரிவித்தார். பாகனேரி நூலகத்தில் வைத்தே பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.அப்பகுதியை சேர்ந்த நாகராஜன் கூறுகையில், ""புத்தகங்களை சென்னை கொண்டு சென்றால், கிராமத்தினருக்கு பயன்படாமல் போகும். இவற்றை வழங்கியவர், கிராமத்திலேயே வைத்து பராமரிக்க வேண்டும் என நிபந்தனையின்படி தான் அரசிடம் ஒப்படைத்தார். புத்தகங்களை பாதுகாக்க பாகனேரி நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்,'' என்றார்

source : Dinamalar 12/12/09