Nagaratharonline.com
 
கீரணிப்பட்டியில் தேரோட்டம்  Apr 18, 12
 
கீரணிப்பட்டிமுத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
கடந்த ஏப்.8ம் தேதி இரவு முத்துமாரியம்மனுக்கு காப்புக் கட்டி மகோற்சவம் துவங்கியது.அம்பாள் வாகனங்களில் வீதி உலா நடந்தது. சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் வெள்ளிரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்தார்.
9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை நடந்து தேரில் எழுந்தருளினார். மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.நேற்று அம்மன் மஞ்சள் நீராடி இளையாத்தங்குடிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடந்தது.