Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்  Apr 13, 12
 
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. விநாயகர் காலை முதல் பக்தர்களுக்கு தங்க அங்கியில் காட்சி அளித்தார். கோயில் திருக்குளத்தில் எழுந்தருளிய அங்குசதேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

கற்பகவிநாயகர் கோவிலில் நந்தன ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. சந்திரசேசகர சுவாமி, கவுரி அம்பாள் ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசைசயில் நின்று சாமிதரிசசனம் செய்தனர்.
கோயில் டிரஸ்டிகள் என்.லெட்சுமணன் செட்டியார், எஸ்.சிதம்பரம் செட்டியார் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

source : Dinamalar