Nagaratharonline.com
 
காரைக்குடியில் சர்குலர் பஸ் தேவை : மாணவர்கள்,பொதுமக்கள் விருப்பம்  Apr 9, 12
 
கல்வி நகரமான காரைக்குடியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றிற்கேற்ப வாகன வசதி குறைவாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து கழகம் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து போலீஸ் முதல் பீட் வழியாக வ.உ.சி., ரோடு, கழனிவாசல், வாட்டர் டேங்க், வருமான வரித்துறை அலுவலகம், செக்காலை ரோடு, பெரியார் சிலை, ஐந்து விளக்கு வழியாக போலீஸ் செகன்ட் பீட்டை கடந்து மீண்டும் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு சர்குலர் பஸ் இயக்கப்பட்டது.
பெரும்பாலான மக்கள் மிகவும் பயனடைந்தனர்.வருவாய் குறைவை காரணம் காட்டி, இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது.


தற்போது, டவுன் பஸ்சை பயன்படுத்துவோர் எண்ணிக்கை காரைக்குடியில் அதிகரித்துள்ளது. எனவே, முன்பு போல் இதே வழித்தடத்தில் சர்குலர் பஸ்ஸை மீண்டும் இயக்குவதோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனையும் இணைக்கும் வகையில் மற்றொரு சர்குலர் பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source : dinamalar