Nagaratharonline.com
 
நெற்குப்பை,மகிபாலன்பட்டி வழியாக புதிய பஸ் வழித்தடம் துவக்கம்  Apr 7, 12
 
திருப்புத்தூரிலிருந்து மகிபாலன்பட்டி வழியாக பொன்னமராவதிக்கு புதியவழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.

கொன்னத்தான்பட்டி,மகிபாலன்பட்டி கிராமங்களுக்கு மாலை 4 மணியிலிருந்து 6.30 மணி வரை பஸ் வசதி இல்லாமல் இருந்தது. கிராமத்தினர் இந்த பஸ் வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.நேற்று புதிய பஸ் ரூட் துவக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து
நெற்குப்பை,கொன்னத்தான்பட்டி,மகிபாலன்பட்டி,கண்டவராயன்பட்டி வழியாக திருப்புத்தூர் வரும் புதிய பஸ் வழித்தடத்தை அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.