Nagaratharonline.com
 
பொன்னமராவதி மலையாண்டி கோவிலில் அக்னி பால்குட விழா  Apr 6, 12
 
பொன்னமராவதி, ஏப். 5: பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அக்னி பால்குட விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி பால்குட விழா சிறப்பாக நடைபெறும். அதேபோல, நிகழாண்டு வியாழக்கிழமை கோவிலின் அருகே அக்னிக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடத்துடன் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பொன்வையாபுரிபட்டி இளைஞர்கள் சார்பில், பறவை முனியம்மா, டி.கே.எஸ். நடராஜன் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Source:Dinamani