Nagaratharonline.com
 
ராங்கியத்தில் சிலை திறப்பு  Apr 3, 12
 
புதுக்கோட்டை, ஏப். 2: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராங்கியத்தில் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவல் குழு முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான வி.என். சிதம்பரம் செட்டியாரின் தந்தை வ.நா.வ. வள்ளியப்பன் உருவச்சிலை திறப்பு விழா மற்றும் கமலம் சிதம்பரம் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பங்கேற்று அறக்கட்டளையைத் தொடக்கி வைத்தார். தொழிலதிபர் ஏ.சி. முத்தையா உருவச்சிலையைத் திறந்து வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா, சிவாஜிராம்குமார், நடிகர் விவேக், டாக்டர் ராஜேந்திரன், வி.என். வள்ளியப்பன், பொன்ராஜ், தொழிலதிபர்கள் மேலைச்சிவபுரி பழ. ராமசாமி, சமயநல்லூர் ஏ.ஆர்.எஸ். சுப்பிரமணியன், கே. நாகராஜன், எம். மலையலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டை இலக்கியப்பேரவைத்தலைவர் மு. முத்துசீனிவாசனுக்கு பொற்கிழி அளிக்கப்பட்டது.

Source:Dinamani