Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் கடையடைப்பு பஸ் மறியல்: 60 பேர் கைது  Mar 22, 12
 
கீழச்சிவல்பட்டியில் பஸ்கள் வந்து செல்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தினர் கடையடைப்பு நடத்தினர்.
கீழச்சிவல்பட்டி, திருப்புத்தூர்-புதுக்கோட்டை ரோட்டில் உட்புறம் உள்ளது. தற்போது புதுக்கோட்டை வழிச் செல்லும் பஸ்கள் கீழச்சிவல்பட்டி வருவதில்லை.
சுற்று வட்டாரக் கிராமத்தினர் பஸ் வசதியின்றி சிரமத்திற்குள்ளாயினர். பல முறை கோரிக்கை விடுத்தும் பஸ்கள் வரவில்லை.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தவும்,நகர் மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக் கோரியும் கீழச்சிவல்பட்டியில் கடையடைப்பு நடத்தினர்.
பின்னர் சுற்று வட்டாரக் கிராமத்தினர் விராமதி அருகே ரோட்டில் மறியல் செய்தனர். டி.எஸ்.பி.மங்களேஸ்வரன் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

source : Dinamalar