Nagaratharonline.com
 
கானாடுகாத்தானில் குடிநீர் நிறுத்தம்  Mar 20, 12
 
கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் ஐந்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் நிறுத்தப்பட்டதால் மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்

.கொத்தமங்கம் ரோட்டிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தினமும் காலை 6.30 முதல் 7.30 மணி வரை பேரூராட்சி மூலம் 4, 5, 6, 7 மற்றும் 8 வது வார்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மேட்டுப்பகுதியான அரசு மருத்துவமனை பகுதியில் குடிநீர் சப்ளை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இணைப்பு பெற்ற 200க்கும் மேற்பட்டோர் தண்ணீரை தேடியலையும் பரிதாபம் உள்ளது.