Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் நகைக் கடைகள் அடைப்பு  Mar 18, 12
 
மத்திய பட்ஜெட்டில் தங்க நகை மீதான வரி உயர்வு அறிவிப்பைக் கண்டித்து, பொன்னமராவதி, புதுக்கோட்டையில் நகைக் கடைகள் சனிக்கிழமை மாலை முதல் அடைக்கப்பட்டன.

மத்திய பட்ஜெட்டில் தங்க நகை மீது இறக்குமதி வரியாக இரண்டு முதல் நான்கு சதமும், கலால் வரியாக ஒரு சதமும் உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை வரி 4 சதமாக்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

( 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்குவோர், பான்கார்டை காண்பிக்க வேண்டும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது)