Nagaratharonline.com
 
காரைக்குடியில் மார்ச் 20, 21ம் தேதி போக்குவரத்து மாற்றம்  Mar 17, 12
 
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 21ல் பால் குட உற்சவம் நடக்கிறது.பக்தர்கள் மகர்நோம்பு பொட்டல் அருகிலுள்ள முத்துமாரியம்மன் கோயில் ஊரணியில் நீராடி பால்குடம் சுமந்து செக்காலை ரோட்டை கடந்து கோயிலுக்கு செல்வர்.

பக்தர்களின் நலன் கருதி, மார்ச் 20, 21ம் தேதி நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து காரைக்குடி வரும் பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களும் போலீஸ் முதல் பீட் வழியாக திருப்பி விடப்பட்டு, வ.உ.சி., ரோடு, செக்காலை ரோடு வழியாக புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

அங்கிருந்து தேவகோட்டை மார்க்கமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் மருதுபாண்டியர் நகர், அரசு மருத்துவமனை வழியாக பெருமாள் கோயில், செஞ்சை வழியாக திருப்பி விடப்படும்.நகருக்குள் செக்காலை ரோட்டிலுள்ள புது ஐயப்பா ஜவுளிக்கடை வரை டூ வீலர் மற்றும் கார் அனுமதிக்கப்படும்.