Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்  Mar 12, 12
 
பொன்னமராவதியில் இரு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய், 5 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன
.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி உத்தரவின் பேரில், பொன்னமராவதியில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் சி. ராஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நாட்டுக்கல் பகுதியில் உள்ள பேக்கரியில் இருந்து 30 லிட்டர் மண்ணெண்ணெய், 5 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, அதே வீதியில் உள்ள மளிகைக் கடையில் 70 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

source ; Dinamani