Nagaratharonline.com
 
வலையபட்டி வலம்புரிநாத சுவாமி கோயிலில் 108 கலசாபிஷேகம்  Mar 10, 12
 
பொன்னமராவதி வலையபட்டி வடுவகிர் அம்பாள் சமேத வலம்புரி நாத சுவாமி கோயிலில் லட்சார்ச்சனை, 108 கலசாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.


பொன்னமராவதி வலையபட்டியில் உள்ள வலம்புரி நாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இக்கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் லட்சார்ச்சனை மற்றும் கலசாபிஷேக விழா நடைபெறும். வலையபட்டி நகரத்தார் சார்பில் இந்த விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு செவ்வாய் மற்றும் புதன்கிழமை இந்த விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மலர்களை கொண்டு சுவாமிக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை நிகழாண்டு கோயில் காரியக்காரர்கள் எம். மீனாட்சிசுந்தரம், எஸ்பி. மணி, எம். பழனியப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.