Nagaratharonline.com
 
நகரத்தார்களுக்குச் சொந்தமான நகரப் பள்ளியில் உள்ள அம்மன் சிலைக்கு வைரவேல் சாத்தும் நிகழ்ச்சி  Mar 10, 12
 
தேவகோட்டையில் நகரத்தார்களுக்குச் சொந்தமான நகரப் பள்ளியில் உள்ள அம்மன் சிலைக்கு வைரவேல் சாத்தும் நிகழ்ச்சி மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்றது.

குன்றக்குடியிலிருந்து இந்த வைர வேல் எடுத்துவரப்பட்டு, முன்தினம் தேவகோட்டையில் உள்ள நகர சிவன் கோவிலில் வைக்கப்பட்டது.
பின்னர் மாசி மகத்தன்று காலையில் சிவன் கோவிலில் வைத்து அபிஷகம் நடத்தப்பட்டு, ஊர்வலமாக வைரவேல் எடுத்து வரப்பட்ட்து.
நகரப்பள்ளியில் உள்ள அம்மன் சிலைக்கு வேல் சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வு நடைபெறும்போது 16 மூட்டை அரிசி வடிக்கப்பட்டு, பக்தர்தர்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டும் என்பது ஐதீகம்.
இந்த வேலை எடுத்துவரும் உரிமை தேவகோட்டையிலுள்ள நகரத்தார்களுக்கு மட்டுமே உண்டு எனவும் கூறப்படுகிறது.
இதில் பல்வேறு ஊர்களில் இருந்து நகரத்தார்கள் வந்து கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

source : Dinamani