Nagaratharonline.com
 
பாஸ்​போர்ட் பெற போலி பிறப்​பு சான்று:​ இரு​வர்​கைது  Dec 9, 09
 
பாஸ்​போர்ட் பெறு​வ​தற்கு போலி பிறப்​புச் சான்று வழங்​கிய நெற்​குப்பை பேரூ​ராட்சி அலு​வ​லர் உள்​ளிட்ட இரு​வரை போலீ​ஸôர் கைது செய்​த​னர். ​

​ ​ சிங்​கம்​பு​ணரி அரு​கே​யுள்ள எம்.கோவில்​பட்​டி​யைச் சேர்ந்​த​வர் முரு​கா​னந்​தம் ​(20), இவர் வெளி​நாடு செல்​வ​தற்கு திட்​ட​மிட்டு,​ பாஸ்​போர்ட் பெறு​வ​தற்​காக விண்​ணப்​பித்​தார்.

​ ​ அதில் இணைக்​கப்​பட்டு,​ இருந்த பிறப்​புச்ó சான்று போலி​யா​னது என்ற ந்​தே​கத்​தின் பேரில்,​ சிவ​கங்கை மாவட்ட ​ காவ கண்​கா​ணிப்பு அலு​வ​ல​கத்​தில் பாஸ்​போர்ட் அலு​வ​ல​கம் சார்​பில் புகார் செய்​யப்​பட்​டி​ருந்​தது.

​ ​ இதன் பேரில்,​ போலீ​ஸôர் மேற்​கொண்ட விசா​ர​ணை​யில் முரு​கா​னந்​தம் தனது சித்​தப்​பா​வான நெற்​குப்பை பேரூ​ராட்சி உதவி அலு​வ​லர் சிற்​ற​ர​சுவை பிறப்​புச் சான்று பெற நாடி​யுள்​ளார்.

​ ​ அதைத் தொடர்ந்து,​ சிற்​ற​ரசு பேரு​ராட்சி செயல் அலு​வ​லர் போல் கையெ​ழுத்​திட்டு பிறப்​புச் சான்று வழங்​கி​யது தெரி​ய​வந்​தது.

​ ​ இத​னைத் தொடர்ந்து போலி பிறப்​புச் சான்று அளித்த பேரூ​ராட்சி உதவி அலு​வ​லர் சிற்​ற​ரசு மற்​றும் பாஸ்​போட் விண்​ணப்​ப​தா​ரர் முரு​கா​னந்​தம் ஆகிய இரு​வர் மீதும் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து ஞாயிற்​றுக்​கி​ழமை கைது செய்​த​னர்.

dinamani 07/12/09