Nagaratharonline.com
 
கல்லலில் மாசித் தேரோட்டம்  Mar 6, 12
 
கல்லல் சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நடந்தது.

கடந்த 27 ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் காலை,இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கலைநிகழ்ச்சி,மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 9ம் நாள் முக்கிய நிழ்ச்சியான தேரோட்டத்தில் பெரிய தேரில் சோமசுந்தரேஸ்வரர் பிரியாவிடையும்,சின்ன தேரில் சவுந்திரநாயகியம்மனும் வீற்றிருக்க நேற்று மாலை 5.10க்கு தொடங்கி 6.20 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.