Nagaratharonline.com
 
மதுரையில் செவ்வாய்க்கிழமை முதல் 'ஹெல்மெட்' அணிய வேண்டும்  Mar 1, 12
 
மதுரையில் செவ்வாய்க்கிழமை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாநகர் காவல்துறை ஆணையர் பி. கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

மதுரையில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. முதல்கட்டமாக 1419 பேரிடம், சுமார் ரூ. 1.49 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.