Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை, ஒருநாள் திருத்தல சுற்றுலா  Feb 27, 12
 
 
நகரத்தார் நற்பணி மன்றம் - சென்னை, பாஸ் அவின்யு , 3/621,கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், சென்னை - 41, உறுப்பினர்களில் 40 நபர்கள், 26/02/2012 அன்று, ஒருநாள் ஆந்திர திருத்தல சுற்றுலா சென்று வந்தனர்.

கடலுக்கு அடியில் மறைத்து வைத்த வேதங்களை, மச்ச அவதாரம் மூலம் மீட்ட திருமால் அருள் பாலிக்கும் நாகலாபுரம் வேத நாராயணப் பெருமாள் ஆலயம், சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கி, பார்வதியின் மடியில் தலை சாய்த்து பள்ளிகொண்ட திருக்கோலத்தில் பக்தர்களை பாதுகாக்கும் சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் ,
ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை தன் வாலினால் பலம் கொண்ட மட்டும் இழுத்தும், இடத்தை விட்டு நகராமல் நம்மைக் காக்கும் ராமகிரி,
வாலீஸ்வரர் ஆலயம் மற்றும் காக்களூர் ஆஞ்சநேயர் ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர் .

சுற்றுலா ஏற்பாடுகளை செயலாளர் ஆறு .சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தார்கள்

Editor, nagarathargateway.com