Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி: ப.சிதம்பரத்திடம் பொதுமக்கள் மனு  Feb 13, 12
 
திருப்பத்தூர், பிப். 12: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
கீழச்சிவல்பட்டி சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ப.சிதம்பரம் 125 பேரிடம் மனுக்கள் பெற்றார். மனுக்களைப் பரிசீலித்த அமைச்சர் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந் நிகழ்ச்சியில், காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம், திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அருணகிரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரெத்தினம், கீழச்சிவல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இ.எம்.எஸ். அபிமன்யு, திருப்பத்தூர் நகர் காங்கிஸ் தலைவர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Source:Dinamani