Nagaratharonline.com
 
பழநியில் வெடிகுண்டு புரளி  Feb 7, 12
 
பழநியில் தைப்பூச விழா பிப்., 1 முதல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. இதற்காக, ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

இரவு 8 மணிக்கு ஒரு நபர், மொபைல் மூலம், "108' ஆம்புலன்ஸ் சேவை பிரிவுக்கு (சென்னை) பேசினார். "பழநியில் பொது இடத்தில் வெடிகுண்டு விரைவில் வெடிக்கும்' என, தெரிவித்தார். மோப்ப நாய் வேணி உதவியுடன், பஸ் ஸ்டாண்ட், கடைகள், தியேட்டர்களில் போலீசார் சோதனை நடத்தினர். இரவு 10 மணி வரை, சோதனை தொடர்ந்தது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை கொண்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.

source ; Dinamalar