Nagaratharonline.com
 
தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப். 5ல் கும்பாபிஷேகம்  Jan 27, 12
 
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் பிப்.5ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. தேவகோட்டை கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த ஆட்சியில் இக்கோயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இந்த பணி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தி தேரோட்டம் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சோமநாராயணன் தலைவராகவும், செயலராக வெங்கிடாசலம், பொருளாளராக சேவுகன் கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

கும்பாபிஷேகம்: புது பொலிவுடன் காட்சியளிக்கும் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் , அருகில் குங்குமகாளியம்மன் கோயில், தேரடி கருப்பர் கோயில்களின் கும்பாபிஷேகம் வரும் பிப். 5 தேதி நடைபெறவுள்ளது. ஸ்தானிகம் சந்திரசேகர குருக்கள் மேற்பார்வையில் யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


source : Dinamalar