Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி சாலையில் அவதி  Dec 2, 09
 
சேதம் அடைந்த கண்டவராயன்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருப்புத்தூரில் இருந்து பொன்னமராவதி செல்லும் கண்டவராயன்பட்டி சாலையில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டன.இதனால் முற்றிலும் சேதமடைந்து, மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் சகதியாகி போக்குவரத்திற்குஇடையூறாக உள்ளது. தற்போது குடிநீர் குழாய் பணிகள் முடிவடைந்து விட்டதால், சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.இதே போல நெற்குப்பையில் சாலை முழுமையாக சேதமடைந்து மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ""திருப்புத்தூர் புதுப்பட்டியில் இருந்து தெக்கூர் வரை சாலைக்கு நிதி அனுமதியாகி, டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றனர்

source : Dinamalar 03/12/09