Nagaratharonline.com
 
BSNL டவர் இல்லாததால் அவதி  Jan 13, 12
 
சிங்கம்புணரி அருகே பி.எஸ்.என்.எல்.,டவர் இல்லாததால் பல கிராம மக்கள் மொபைலில் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். முறையூரில் டெலிபோன் எக்சேஞ்ச் இயங்குகிறது.

மு.சூரக்குடி,அய்யாபட்டி,மருதிப்பட்டி. எம்.கோயில்பட்டி, திருக்களாப்பட்டி கீழநிலை கிராமங்களில் 700, தரைவழி போன்கள், பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
முறையூரில் அரசுமேல்நிலைப்பள்ளி,கூட்டுறவு நாணய சங்க ம்,கூட்டுறவு பால்பண்ணை, ஐ.சி.ஐ. சி,ஐ., வங்கி உட்பட பல நிறுவனங்கள் உள்ளன. குறைந்தது 3 கி.மீ.,தூரத்தில் டவர் இருந்தால் மட்டுமே தொடர்பு கிடைக்கும்.
இக்கிராமங்களை சுற்றி அ.காளாப்பூர்,கருப்பூர்,அ. தெக்கூரில் டவர் அமைக்கப்பட்டுள்ளது. எல்லாமே அதிக தூரத்தில் இருப்பதால் அவசரத்திற்கு மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை.


source : Dinamalar