Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் 20 -ஆம் ஆண்டு விழா.  Jan 10, 12
 
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் 20 -ஆம் ஆண்டு விழா,08/01/2012 அன்று சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் - மீடியா ஹாலில் காலை 9 மணிக்கு சிறப்பாக துவங்கியது . சங்கத்தின் தலைவர், PL.A. லெட்சுமணன் அனைவரையும் வரவேற்ற பிறகு, செயலாளர் MR. மகேஷ் பெரியகருப்பன் ,ஆண்டு அறிக்கை வாசித்தார். ஆ.தெக்கூர் Dr.Sசுப்பிரமணியன்.M.D.,MRCP (UK), Chairman,V.S.Hospital,Chennai. தலைமை ஏற்று நகரத்தார்களின் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்து உரைத்தார்கள் .


மேலைசிவபுரி திரு. E.ஞானம் அவர்களை சங்கம் பாராட்டி கௌரவித்தது . பாராட்டை ஏற்று நன்றி தெரிவித்து, திரு.E. ஞானம் பேசும்போது, நெற்குப்பையின் மாப்பிள்ளை ஆனது குறித்து பெருமைப்படுவதாகவும் நகரத்தார்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சிறப்பாக வாழ வேண்டும் என்றும் ஏசுநாதர் வாழ்க்கை நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். "ப்ரவ்சனா திலகம் ஸ்ரீ தாமல் ராமகிருஷ்ணன் நகரத்தார்கள் ராமாயணம் (ஏடு) படிக்கும் பழக்கத்தை குறிப்பிட்டு சிறப்புரை ஆற்றினார்.

சிறுவர் பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், குழந்தகளின் தனித்திறமை வெளிக்காட்டுதல் போன்ற பல நிகழ்சிகள் நடத்தப்பட்டன.

காலை மற்றும் மதிய உணவு, மாலை சிற்றுண்டி சுவையான முறையில் வழங்கப்பட்டது. தலைவர் PL.A. லெட்சுமணன், துணைத்தலைவர் M.அருணாசலம், செயலாளர் MR. மகேஷ் பெரியகருப்பன், துணை செயலாளர்கள் PR. சுந்தர், L. ராமநாதன் பொருளாளர் P. பனையப்பன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

editor, nagarathargateway.com