Nagaratharonline.com
 
நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்  Jan 8, 12
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றது. சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகஸிய பூஜை நடத்தப்பட்டது.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் மாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நடராஜமூர்த்தியும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி மார்கழி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபை பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

source ; Dinamani