Nagaratharonline.com
 
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க ரூ.52 லட்சத்தில் தானியங்கி இயந்திரங்கள்  Jan 8, 12
 
பழனி திருக்கோயில் பஞ்சாமிர்த நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான பஞ்சாமிர்த இயந்திரங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தார்.
பழனியாண்டவர் திருக்கோயிலில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விஞ்ச் நிலையம் அருகே இயங்கிவரும் தானியங்கி பஞ்சாமிர்த நிலையத்தில் கூடுதலாக ரூ.52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பஞ்சாமிர்தம் நிரப்பும் இயந்திரத்தையும் அமைச்சர் இயக்கி வைத்தார்.

source : Dinamani