Nagaratharonline.com
 
காரைக்குடி : போலி ஆவணம் மூலம் ரூ.பல கோடி நில மோசடி  Jan 8, 12
 
காரைக்குடி அரு.அ., வீதியை சேர்ந்தவர் குமரப்பன். இவருக்கு சொந்தமான 17 சென்ட் காலியிடம் (சர்வே எண் 632/1, 632/2) சண்முகராஜா ரோடு, துரைசிங்கம் நகர் வடக்கில் இருக்கலாம் என தெரிகிறது. இந்த இடத்தை, பருப்பூரணியை சேர்ந்த காசி மகன் செந்தில்நாதன்,38. உள்ளிட்ட சிலர் போலி ஆவணம் தயாரித்து தங்களது பெயருக்கு பதிவு செய்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை விற்க முயற்சிப்பதாக, குமரப்பன் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்நாதன் உட்பட சிலர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

source : Dinamalar