Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்டத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு:  Dec 27, 11
 
சிவகங்கை மாவட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மின் வெட்டு நீடிப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

முதல்வராக ஜெ.,பதவியேற்ற சில மாதங்கள் மட்டும் மின்வெட்டு குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பதிலாக கூடுதலாக 3 மணி நேரம் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. தொடர்ந்து அறிவிக்கப்படாத நேரத்தில் மின்தடை செய்யப்படுவதால் எந்த வேலையும் செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.