Nagaratharonline.com
 
மகிபாலன்பட்டி - நடுநிலைப் பள்ளி தரம் உயர்வு  Dec 26, 11
 
திருப்பத்தூர், டிச. 25: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம், மகிபாலன்பட்டி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டதற்கான விழா நடைபெற்றது.

மகிபாலன்பட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பி. சுரேஷ், முன்னிலை வகித்தார். நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். நிகழ்ச்சியின், சிறப்பு அழைப்பாளரான ஒன்றியத் தலைவர் ஏ.வி.என். கஸ்தூரி நாகராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.

மேலும், இந் நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் அழகு, ரேணுகாதேவி, அழகுஜோதி, அந்தோணிசாமி, லதா, செல்வராஜ், ரெங்கராஜ், தனலெட்சுமி, பழனிவேல் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் செல்வி மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Source:Dinamani