Nagaratharonline.com
 
இருமாடி கட்டடங்களுக்கு சென்னையில் புது கட்டுப்பாடு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம்  Dec 18, 11
 
இருமாடிகள் கொண்ட கட்டடங்கள் சென்னையில் கட்டும் போது, பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இருந்தால் மட்டுமே குடிநீர், மின் இணைப்பு வழங்க அனுமதிக்கப்படும்.


எல்லாவிதமான கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின், குடிநீர், கழிவு நீர் இணைப்புகள் கிடைப்பதை தடுக்க அந்தந்த துறைகளின் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஐகோர்ட் அமைத்த கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே மாநகராட்சியின் இப்போதைய நடவடிக்கை அமைந்துள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.